Posts

Showing posts from May, 2016
Image
மின் கம்பிக் குருவிகள் எஸ். சங்கரநாராயணன்   ஒ ரு விரல் உலகைப் பார்த்து நீட்டும் போது மத்த மூணு விரல்கள் உன்னையே காட்டுகிறது என்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. பிறரைப் பற்றி எழுதுவதான பாவனையில் மிக்கவாறும் தன்னையே காட்டிக் கொடுத்து விடுகிறது எழுத்து. அதற்கு ஓர் எழுத்தாளன் தயாராய் இருக்க வேண்டும். காலப்போக்கில் ஒரு வேடிக்கை போல அந்த எழுத்தின் அடிநாதமான விமரிசனக் குரலை அவன் தன் வாழ்க்கை பாவனைகளாக ஆக்கிக்கொள்ள உந்தப் படுகிறான். அது ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது. முதல் நிலை, இந்த பாவனைகளில் இருந்து தான் அநத எழுத்து பிறக்கிறது. அடுத்த நிலை, எழுத்து என்று சகஜப்பட்டான பின், எழுத்தில் இருந்து இவனுக்கு ஒரு கிரண வீச்சு கிடைக்கிறது. பெறும் நிலைக்கு, வாசக நிலைக்கு அவன் மீண்டும் வந்தமைகிற வேளை அது. எதனால் எழுதுகிறேன்? அப்படி அலலாமல் வேறு எவ்வாறும் என்னை, என் இருப்பை என்னால் நியாயப் படுத்திக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது. நான் ஒரு அலுவலகப் பணியாளி. பிணியாளி. இது பிணிக்கப் பட்ட பணி. அன்றாடங்களின் ஒழுங்கு அதில் உள்ளது. ஆனால் வாழ்க்கை? அது ஒழுஙகற்று நேர்ப் பாதையாய் அல்லாமல் முப்பரி
Image
லேப்டாப் குழந்தைகள் எஸ். சங்கரநாராயணன் தா ய்நாடு இந்தியா அவர்களை, அவர்களது அறிவை த்தூ த்தூ என்று துப்ப, வெளிநாடுகள் பன்னீர் தெளித்து, வா வா, என அழைத்தன. அப்பா அம்மா அம்பி இந்தியா… எல்லாருக்கும் டாடா காட்டிவிட்டு, சாஸ்திரி கைபர் போலன் வழியே அமெரிக்கா கிளம்பினான். அவை துயரமான கணங்கள். இந்திய மண்ணைப் பிரிய அவனுக்கு ஆசையா என்ன? அழகான அமைதியான ஆன்மிக நாடு. வெளிநாட்டுக்காரர்கள் ஆன்மிகம் தேடி கைபர் போலன் வழியே இங்கே வருகிறார்கள். அவன் வணங்கி சிலிர்க்கும் ஸ்ரீ அரவிந்த அன்னையே எத்தனை பெரிய உதாரணம்? பிரியமான பெற்றோர்கள். அடுத்த தெரு காயத்ரி வேறு காதலும் இல்லாமல், முகச் சுளிப்பும் இல்லாமல் ‘மையப்பார்வை’ பார்த்துக் கொண்டிருந்தாள். மென்பொருள் கல்வி வாசித்து முடித்ததும் கிடைத்த சம்பளத்தில் ஒரு ரெண்டு வருஷம் வேலை பார்த்துவிட்டு, மேலே படிக்கலாம் என்று வேலையை உதறினான் சாஸ்திரி. மூத்த பையன் அப்படி வேலையை உதறியது வீட்டில் எல்லாருக்கும் அதிர்ச்சி தான். ஆனாலும் ஒன்றும் சொல்ல இயலவில்லை. அவனை அமெரிக்கா அனுப்ப உறவினரகள் காட்டிய உற்சாகம் திக்கு முக்காட வைத்துவிட்டது அவனை. ஒரு விநாடி, இந்தப் ப