நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் இந்துமதம் பத்தி யோசித்து ஒரு கதை வடித்திருக்கிறா ர் என்பதே இதில் என் முதல் ஆச்சர்யம். வாழ்வும் சாவும் ஹென்ரிக் சியென்கிவிச் (போலந்து) தமிழில் எஸ். சங்கரநாராயணன் ப ரந்த இரு பெருவெளிகளின் நடுவே துல்லியமாக ஓடும் நதி ஒன்று. நதியின் கரைகள் ஓரிடத்தில் சரிந்திறங்கி குளம்போலும் அடங்கியது. உள்ளே உள்ளது உள்ளபடி தெரியும் அமைதியான நீரோட்டம். இந்தச் சிற்றாழப் பகுதியில் தண்ணீர் சற்று இருள் பழுப்பு கண்டிருந்தது. அதன் அடியில் பொன்னிற மணல்படுகை. தாமரைத் தண்டுகள் அதில் இருந்து முளைத்தெழுந்திருந்தன. அந்தத் தண்டுகளில் வெண்மையும் சிவப்புமான மலர்கள், மினுமினுக்கும் நீர்ப் பரப்புக்கு மேல் மலர்ந்திருந்தன. பலவண்ணச் சிறு வண்டுகள் பட்டாம்பூச்சிகள் என அந்தப் பூக்களைச் சுற்றின. கரைபக்கம் பனை மரங்கள். உயர உயரங்களில் புள்ளினங்களின் வெள்ளிமணி யோசை போன்ற சப்தயெடுப்புகள். அந்த இரு பிரதேசங்களுக்கும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் கடந்து போய்வரும் வழியாக இந்தக் குளம் இருந்தது. முதல் பிரதேசம் வாழ்க்கை வெளி என்று அழைக்கப்பட்டது. மற்றது மரண வெளி. மகா புருஷனும் சர்வ வ
Posts
Showing posts from November, 2016
- Get link
- Other Apps
courtesy - solvanam net magazine ஒரு கிறிஸ்துமஸ் மாலை லாங்ஸ்டன் ஹியூக்ஸ் தமிழில் எஸ். சங்கரநாராயணன் அ வள் அர்சி. கருப்பின வேலைக்காரி. இரவு உணவுக்காக அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். ரொம்ப அலுப்பாய் இருந்தாள். மதிய உணவு சமயத்தில் இருந்து அவளுக்கு ஓயாத வேலைகள். வெள்ளைக்கார மொத்தக் குடும்பத்தின் அறைகளையும் அவள் சுத்தம்செய்ய வேண்டியிருந்தது. விடிந்தால் கிறிஸ்துமஸ். அதற்கென வீட்டைத் தயார்செய்ய வேண்டும் அவள். குனிந்து குனிந்து நிமிர்ந்ததில் அவள் முதுகு கடுத்தது. தலை கிறுகிறுத்து மயக்கமாய் இருந்தது. ம். இன்னும் சித்த நேரம். எசமானியும் அவளுடைய ரெண்டு குழந்தைகளும் இராச் சாப்பாடு முடித்து விட்டால் அவளுக்கு விடுதலைதான். வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் ஜிலு ஜிலு ஜிகினாத் தொங்கல்களுடன் அலங்காரமாய்க் கூடத்தில். அதற்கு இன்னும் என்னவோ குறை என்று சாமான்கள் வாங்க எல்லாரும் வெளியே போயிருக்கிறார்கள். அங்கங்கே அதற்கு மெழுகுவர்த்திகள். அதை இனி ஏற்றவேண்டும். அவை காத்திருக்கிறாப் போலிருந்தது. ஜோவுக்கும் ஒரு மரம் தன்னால் தர முடிந்தால் நல்லா யிருக்கும், என அர்சி நினைத்துக் கொண்டாள். இன்னுங் கூட