Posts

Showing posts from 2017
Image
இல் அறம் Short story – நன்றி குங்குமம் வார இதழ் எஸ். சங்கரநாராயணன்   வீ ட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவள், அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்க அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் பெற்றவர்களே கரித்துக் கொட்டினார்கள் அவளை. கல்யாணம் அவளுக்கு ஒரு கதவைத் திறக்கும் என நினைத்தாள். இன்னுமான இருட்டு சூழ்ந்திருந்தது அவள் வாழ்க்கையில் இப்போது. வெளியே அந்த இளம் மாலைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது. மேகம் பொருமிக் கொண்டிருந்தது. நாடகம் துவங்குமுன் அரங்கில் ஒளி குறைக்கப்பட்டாப் போல இருள் சூழ்ந்து கவிந்தது. மழை நாடகம் துவங்கப் போகிறது என்று பட்
Image
தனித்து விடப்பட்ட ரயில்பெட்டி (நன்றி பேசும்புதிய சக்தி, டிச. 2017) எஸ். சங்கரநாராயணன் சி றிய ரயில் நிலையம். நிலையத்துக்கு இடதும் வலதுமாக பூனை மீசை போல தண்டவாளங்கள் போகின்றன. ஊருக்கு வெளியே இருந்தது நிலையம். தண்ணி கஷ்டமான ஊர். சனங்கள் ஊரில் இருந்து இடுப்பில் ஒரு குடமும், குஸ்திக்காரன் போல் கையை உள்ளே விட்டபடி எடுத்து வரும் குடங்களுமாக வருவார்கள். தினசரி ரெண்டு லோக்கல் பாசஞ்சர் ரயில்கள் வரும் அங்கே. மத்தபடி மகா அமைதி. மதுரை போகிற ரயில்கள் அங்கே நிற்காது. கடன் கொடுத்தவனைப் பார்த்தாப் போல ஒரே ஓட்டமாய் ஓடும். பரந்த செவ்வக வெளி அது. மல்லாக்கக் கிடத்ப்பட்ட ஏணியாய் தண்டவாளம். ரோடு போடும் கருங்கல் குவித்துக் கிடத்தப் பட்டிருக்கும். பரந்த விஸ்தீரணத்தில் சிமென்ட் எடுத்த நடைமேடை. பள்ளத்தில் ரயில் பாதை. பெரிய பெரிய வேப்ப மரங்கள் புளிய மரங்கள் மகா நிழலளிக்கும் இடம். தாவரங்களை விட நிழல்கள் வேகமாக வளரவும் சுருங்கவும் செய்கின்றன. ஆடுகள் மாடுகள் புல் மேய்ந்துவிட்டு அங்கே வந்து கால்பரப்பி அமரும். இடையன் அவன்பாட்டுக்கு ஸ்டேஷனில் துண்டு விரித்துப் படுத்துக் கிடப்பான். மேற் கூரை தேவைப்படாத ஸ்டேஷ
Image
'விறகு' – வெட்டி   அன்டன் செகாவ் தமிழில் எஸ். சங்கரநாராயணன் ''த ர்மப்பிரபு, உங்கள் பரிவுப் பார்வையை என்மீது செலுத்துங்கள். நான் மூணு நாளா எதுவுமே சாப்பிடவில்லை. கடவுளாணை. குளிருக்கு ஒதுங்க விடுதிச் செலவுக்கான அஞ்சு கோபெக், அதுவே என்னிடம் கிடையாது. ஒரு கிராமத்தில் அஞ்சு வருஷம் நான் பள்ளிக்கூட வாத்தியாரா வேலை பார்த்தவன். ழெம்ஸ்ட்வோ விவகாரத்தில், அதில் சம்பந்தப்படவே இல்லாத போது,  எவனோ என்னையும் மாட்டிவிட்டுட்டான். இப்ப வேலை யிழந்து நிற்கிறேன். ஒரு வருஷமாய் இப்படி போக்கத்துப் போயி அல்லாடித் தவிக்கிறேன்...''       இவர் ஸ்கோர்த்சவ். பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் வழக்கறிஞர் அவனைப் பார்த்தார். கந்தையான அவனது கருநீல மேல்கோட்டு. இரத்த சோகையான குடிபோதைக் கண்கள். செம்மைப்பட்ட கன்னங்கள்... அவனை எங்கேயோ பார்த்தாப் போல் இருந்தது.        ''... இப்ப எனக்கு காலுகா மாநிலத்தில் ஒரு வேலை கிடைச்சிருக்கு...'' அவன் தொடர்ந்தான். ''என்கிட்ட தம்பிடி கிடையாது. எப்படி அங்க நான் போக முடியும்? கருணை காட்டுங்க புண்ணியவான். கேட்க அவமானமாகத்தான் இருக்கிறது. ஆனா
Image
ஒரு லட்சம் புத்தகங்கள்   சுஜாதா   சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட் பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது. "தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..." "இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?" "பேரறிஞர் அ