Posts

Showing posts from April, 2017
Image
எச்சம் மற்றும் இனி அமர்நாத் ம ன்னிக்கவும். நூல்கண்டின் நூலை நுனியில் பிடித்து இழுப்பது போல, மையக்கருத்தை வெளிக் கொண்டுவரும் கட்டுரை இல்லை இது. மூன்று நான்கு நூல்கள் ஒரு சிக்கலில் பின்னியிருக்கின்றன. சிக்கலை எடுத்து அவற்றை ஒரே நீளத்தில் சேர்த்து முடிச்சுப் போடவேண்டிய கட்டாயம். • நாம் இப்போது வரலாற்றின் மிகமுக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.  இது பல சரித்திரக்கதைகளில் படித்து அலுத்துப்போன வசனம்.  ஆனாலும் அது இப்போது முழுக்க முழுக்க உண்மை. நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளின் பரிமாணங்கள் கற்பனைக்கு எட்டாதவை. அவற்றின் தீர்வுகளும் எளிதானவை அல்ல.  ‘லெகஸி’ என்பதற்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை எச்சம். திருவள்ளுவர் பயன்படுத்திய பொருளில், நாம் விட்டுச்செல்லும் பொருட்கள். நெருங்கிய பேரன் பேத்திகளுக்கு மட்டும் இல்லை. அடுத்த, அதற்கு அடுத்துவரும் தலைமுறைக்கு. பெங்களூர் அல்லது மயாமி ரியல் எஸ்டேட்டும், ஸ்விஸ் வங்கியில் பணமும் அவர்களுக்கு எவிவிதத்திலும் உதவாது.  • ‘ஒரு மாதம் ஒரு தீவில் தன்னந்தனியாக வாழ வேண்டும். ஒரு புத்தகம் மட்டுமே எடுத்துப் போகலாம். அது எது?’ என்பது ஒருவரின் மன
Image
பட்டம் (நன்றி பேசும் புதிய சக்தி மாத இதழ்) எஸ். சங்கரநாராயணன்   க மலவல்லி குளத்தின் படித்துறையில் கால் வைத்தபோதே லேசாய் விடியல் வெட்க முகம் கொண்டு விட்டது. இன்று அவள் சற்று தூங்கிவிட்டாள். அதுகுறித்து அவளுக்கே வெட்கம். இந்நிலையில் வானம் வேறு அவளைக் கெக்கலி கொட்டிக் கேலி செய்கிறாப் போலிருந்தது. குளிர் பிரியாத காலை தான். முதல்படியில் அந்தக் குளிர் அவளைத் தயங்க வைத்தது. கட்டைவிரலின் நுனியை நீருக்கு நீட்டியபோது சிற்றூசிகள் பாய்ந்தாப் போலிருந்தது. நேரமாகி விட்டது. சட்டென காலை முழுசுமாய் நீரில் இறக்கினாள். வாயை விரித்து உதடுகளால் அவள் பாதங்களைக் கவ்விப் பதறடித்தன மீன்கள். கணவனின் சிறு ஸ்பரிசங்களும் முத்தங்களுமான கிளுகிளுப்பை ஊட்டின மீன்கள். கடந்த ராத்திரியின் நினைவுகளில் அவள் முகம் மேலும் சிவந்தது. கை தானறியாமல் அதரங்களை வருடிக் கொடுத்தது. அப்பாவு என்ன செய்கிறான் தெரியவில்லை. அவள் எழுந்து கொள்ளுமுன்னே அவன் எழுந்து கோவிலுக்கு வந்துவிடுவான். அகலமான வீதிகள். இருமருங்கும் எண்ணெய் விளக்குகள் ஒன்று விட்டு ஒன்று விடிய விடிய எரிந்தபடி யிருக்கும். காற்றில் அதன் சுடர் சதா துடித்துக் கொண்டி